June 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் தேசியம் பேசுபவர்களின் ஆதாரங்கள் எனது கையில்- கருணா விடுத்துள்ள மிரட்டல்!

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் ...

மேலும்..

அம்பாறையில் ஆரம்பமானது கருணாவின் தேர்தல் பிரசாரம்

தமிழர் மகாசபை சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான், தனது தேர்தல் பிரசாரத்தை அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- கல்முனை, அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் தேங்காய் உடைத்த பின்னர் ...

மேலும்..

வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் – துமிந்த

நாட்டில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் ...

மேலும்..

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரின் சிலை திறப்பு

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini-இன் சிலை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. யாழ். மறைமாவட்டத்தின் முதல் ஆயராக வடிவமைக்கப்பட்ட உருவச் சிலையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இன்று திறந்து வைத்தார். குறித்த சிலையை வடிவமைத்த ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இனிவரும் காலங்களிலும் குரல் கொடுப்பேன்- நவீன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குரலாக எதிர்வரும் காலங்களிலும் இருப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) நுவரெலியா- கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்

இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேருவாலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அனைத்து தேசபக்தர்களும் ஐக்கிய ...

மேலும்..

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..

கருணாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் – லக்ஷமன்

போரின்போது இரண்டு, மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக கருணா அம்மானே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும் என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கருணா அம்மான் ...

மேலும்..

ஐ.சி.சி.யிடம் ஆட்டநிர்ணய சதி குறித்த ஆதாரங்கள்- மஹிந்தானந்த

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின்போது, ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷியில் இருந்து நாடுதிரும்பிய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ...

மேலும்..

தமிழரசுக்கட்சி ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து விமலேஸ்வரி கேள்வி

புலம்பெயர் அமைப்புகளினால் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக ...

மேலும்..

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்- வேட்பாளர் கணேஸ்வரன்

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாங்கள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன நாடாளுமன்றில் கால்பதிக்கும்- சி.பி.ரத்நாயக்க

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார். பூண்டுலோயா, கலப்பிட்டிய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 2014 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார்- தவராசா

சீ.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றாரென முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாளர் ...

மேலும்..

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பல தியாகங்கள் செய்யப்பட்டன – பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தம் தரப்பில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், அந்த தியாகங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ...

மேலும்..

தனது ஆட்சியில் எரிபொருள் விலையை குறைப்பதாக சஜித் உறுதி

பொதுமக்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் சலுகைகள் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது குறைக்கப்பட்ட எரிபொருள் விலையின் பலன்களை மக்கள் அனுபவிக்கவில்லை என்றும் ...

மேலும்..

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா? ஜனாதிபதி விளக்க வேண்டும் என்கின்றார் கிரியெல்ல

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா என ஜனாதிபதி விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பொதுஜன ...

மேலும்..

இலங்கையின் எல்லைப் பகுதி பலவீனமாக காணப்படுகின்றது- அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையின் கடல் சார்ந்த எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றதென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் அனைத்து நாடுகளிலும் காணப்பட்ட பயங்கரவாத நிலைமை குறித்து வெளியிட்டுள்ள தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த ...

மேலும்..

மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. இலங்கையில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் ...

மேலும்..

“மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது”

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நிலவும் சவால்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதித் தேர்தலின்போது ...

மேலும்..

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்களே இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாக அத் திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கண்டி ...

மேலும்..

அண்டை நாடுகளுக்கு முன்பாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் – ரமேஷ் பதிரன

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முன்பாக இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதார வேலைத்திட்டங்கள் ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் ஜயந்த தனபால உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி அரசியலமைப்பு சபையில் இருந்து இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பேரவையின் ...

மேலும்..

விக்கி- சம்பந்தன் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டும்: வினோநோகராதலிங்கம்

விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். வவுனியா- புளியங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

சித்தங்கேணியில் வயோதிப பெண்களை தாக்கி கொள்ளை

வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தி தாக்கி  25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் சித்தண்கேணியில் வயோதிபப் ...

மேலும்..

முழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா

இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

குணாளன், கார்த்தீபன் முயற்சியால் நீக்கப்பட்டது நயினாதீவுக்கான பாஸ்!

நயினாதீவு செல்வதற்கான பாஸ் நடைமுறை நயினாதீவைச் சேர்ந்த ம.கார்த்தீபன் மற்றும் க.குணாளன் ஆகியோர் அதற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்  இதனைத் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மடு மாதா ஆலய திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி- இம்மானுவேல்

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார்- மடு மாதா திருத்தலத்தில் ...

மேலும்..

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகின்றது – சுமந்திரன் எச்சரிக்கை

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி நெல்லியடி ...

மேலும்..

நல்லுாரிலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் சுவரொட்டிகள்- மக்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டுமென பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ...

மேலும்..

வவுனியா- ஓமந்தையில் விபத்து: 18 பேர் படுகாயம்

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ...

மேலும்..