July 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி தமிழரைக் கொச்சைப்படுத்துகிறார் விக்கி ஆயுதப் போராளிகள் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை என்கின்றார் கணேஷ் வேலாயுதம்

"போராளிகள் குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அருகதை இல்லை. 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்தான். ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் பெற்றுக்கொடுத்த மாகாண சபைக் கதிரையை 5 வருடங்களாகப் பிடித்துக் ...

மேலும்..

உள்ளக சுயநிர்ணய உருத்து தமிழ் மக்களுக்கு உள்ளது! மறுத்தால் விளைவு பாரதூரமாகலாம் கோட்டாவை எச்சரித்தார் சம்பந்தன்

இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் குடியியல் உரிமைகளின் அடிப்படையிலும், பொருளாதார சமூக கலாசார உரிமைகளின் அடிப்படையிலும் ஒரு மக்கள் குழாமிற்கு உள்ளக சுயநிர்ணய உரித்து உள்ளது.  அது மறுக்கப்படுகின்றபோது விளைவுகள் பாரதூரமாக அமையும். - இவ்வாறு கோட்டா ...

மேலும்..

வேலைவாய்ப்புக்களை இலகுபடுத்த வேண்டும் – மஹிந்த

வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் புதிய அபிவிருத்தி செயல்முறையுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியும்  நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து செயற்படும் புது யுகமொன்று தோற்றம் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அந்த புது யுகத்தை உருவாக்குவதற்கு மொட்டு ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, அறிவியல், வர்த்தகம், முகாமைத்துவம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கல்வி ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

மேலும்..

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களில் நேற்றைய தினம் ...

மேலும்..

8 மாதங்களாக எதனையும் சாதிக்காத அரசாங்கம் 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது?- ரணில்

8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் ...

மேலும்..

ரூபெல்லா நோயைக் கட்டுப்படுத்திய முதல் 2 நாடுகளில் இலங்கை!

உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. மூன்று வருடங்களினுள் ரூபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனங்காணப்படாவிட்டால் குறித்த நாடு ...

மேலும்..

இரத்தினபுரி தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு

இரத்தினபுரி – பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த இரண்டு சடலங்களும் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் இருவரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்களில் ஒரு சடலத்தின் ...

மேலும்..

கிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் 70 வீதமானோர் இளவயதுடையவர்கள் என கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், ...

மேலும்..

இலங்கையில் சிக்கியிருந்த 153 பேர் இந்தியாவுக்குப் பயணம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 153 பேர் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து ...

மேலும்..

நாவிதன்வெளியில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில்  மூன்றாம் கட்டமாக சவளக்கடை கிராம சேவகர் பிரிவில் உள்ள வி.ஜெயந்தி ...

மேலும்..

தேர்தலில் இருந்து விலக்போவதாக அறிவித்தார் பாலித்த!

தேர்தல் போட்டியிலிருந்து விலகப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உயிரிழந்து போன எனது மகனின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1967 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என அந்த பிரிவு ...

மேலும்..

கொரோனா அச்சம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான கைதி ஒருவர் நேற்று அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணிய தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை ...

மேலும்..

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்புரிசார் விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ...

மேலும்..

சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கும் சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கும் வாக்களிக்குமாறு சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட இணைப்பாளர் அ. மாதவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடைபெறவுள்ள ...

மேலும்..

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகர்  பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல்முனை பிரச்சாரம்!..

மட்டுநகர் பகுதியில் இன்றைய தினம் (07/07/2020) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நான்காம் கட்ட பொது தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படரடன. நேற்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் திக்கோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. எதிர்வரும் ஆகஷ்ட் 5,ம் திகதி இடம்பெற இருக்கும் பொதுத்தேர்தலில் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க ...

மேலும்..

திருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது – தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

தமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்

ஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வாறு ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.உவைஸ் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய ...

மேலும்..

கட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் – வெளியான முக்கிய தகவல்

இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கட்டாரில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கட்டாரில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், ...

மேலும்..

முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ...

மேலும்..

கருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையம் – கலையரசன்

துரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும்  வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். ஆலையடிவேம்பு கண்ணகி புரம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். தொடர்ந்து ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு

2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாக ...

மேலும்..

நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்!

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தல் தொடர்பாக மக்கள் முன் உள்ள ...

மேலும்..

இன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஞா.சிறிநேசன்

இந்த நாட்டில் மீண்டும் இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி பகையினை உருவாக்கும் செயற்பாடே இந்த அரசாங்கத்தின் செயற்பாடாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு ...

மேலும்..

ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 5.50 வவுனியா புகையிரத நியைத்திலிருந்து கடுகதி ...

மேலும்..

கிளிநொச்சி வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்தார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். இயக்கச்சியைச் சேர்ந்த ...

மேலும்..

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் உறுப்பினர்களாக எல்லாவல மேதானந்த நாயக்க ...

மேலும்..

சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மல்லாகம் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில், எதிர்வரும் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம் நேற்று ...

மேலும்..