July 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ...

மேலும்..

வர்த்தமானி அறிவித்தல் கொரோனாவைக் கட்டுப்படுத்த பயனாக அமையாது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பயனாக அமையாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தலின்படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும் என அந்த சங்கத்தின் ...

மேலும்..

நாட்டில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு – 5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று ...

மேலும்..

பொதுத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இறுதி நாள் இன்று!

எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடையவுள்ளது. இதற்கமைய கடந்த 6 நாட்களில் தபால்மூல வாக்கினை செலுத்த முடியாதவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்முறை தபால்மூல ...

மேலும்..

கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைத்து கடற்படையினரும் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து, அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் ...

மேலும்..

தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை – இப்படிக் கொதித்தெழுகின்றது மஹிந்த அணி

"நாட்டின் அரசமைப்புக்கு முரணாகத் தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது." - இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டியூ குணசேகர ஆகியோர் கூட்டாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கில் சமஷ்டி ...

மேலும்..

கல்லடி சமுகத்தின் பேராதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஸ்ரீநேசனுக்கான தேர்தல் பிரச்சார பணிகள்

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசனின் தேர்தல் பரப்புரைகள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினரால் கல்லடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

கூட்டமைப்பின் பலமே தமிழ் மக்களின் பலம்! – முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

"தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகள் கூட்டமைப்பைப் பலப்படுத்தும். கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். மந்துவில் ...

மேலும்..

சலுகைகளை வழங்கி சமாளிக்கவே முடியாது – தமிழர் உரிமைகளே வேண்டும் என்கிறார் சம்பந்தன்

"சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 03 பேர் சவூதி அரேபியாவில் இருந்து ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்தும் அதேவேளை நாடும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது – நாமல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேவேளையில், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாமல் ராஜபக்ஷ, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மந்தமடைந்தது எனக் ...

மேலும்..

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால்தான் இனவாதியாக பார்க்கப்பட்டேன்- விஜயதாச

கடந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால், இனவாதியாக பார்க்கப்பட்டேன் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்லாமிய அடிப்படைவாதம் ...

மேலும்..

கொழும்பிலுள்ள நடுத்தர குடும்பங்களுக்கு விசேட வீட்டுத்திட்டம்- மனோ கணேசன்

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு சொந்த  வீடுகளை வழங்கும் விசேட வீட்டுத்திட்டம், சஜித் ஆட்சியில் முன்னெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய குழு

சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தலைமையிலான குறித்த குழுவில், சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, மேனக அரங்கன, ...

மேலும்..

மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு எரிபொருளினை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று  (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை ...

மேலும்..

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கையை பிரதமரிடம் வழங்க நடவடிக்கை

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமரிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தயாராக உள்ளது – ரவி

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஒரு முக்கியமான ஒரு தருணத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்களான ராஜித, சம்பிக்கவிற்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவின் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சி – நவீன் திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த   கட்சிக்கு கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை நவதிஸ்பன பகுதியில்  இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும் ...

மேலும்..

கொரோனா அச்சம் – 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

நாடளாவிய ரீதியில்  6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்படல் நடைமுறையை முடித்த மேலும் 6 பேர் இன்று (திங்கட்கிழமை) கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, தேசிய செயற்பாட்டு ...

மேலும்..

ரவி மற்றும் ரிஷாட் மீதான விசாரணையை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை

முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின்போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது எனவே ...

மேலும்..

ரணில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்த

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் நாட்டின் பெரும்பாலான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ...

மேலும்..

கந்தகாடு: வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பின் தற்போதைய நிலைமை

கந்தகாடு போதைப்பொருள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை வரையான நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்கயாக 560 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  மேலும் 6 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 724 பேருக்கு ...

மேலும்..

பொருளாதாரத்திற்கும் வேலையற்றவர்களுக்கும் கைகொடுக்க வேண்டும் – ரணில்

விவேகமுள்ள கொள்கைகளை அமுல்படுத்தாமல் தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து வெற்றிகொள்ள முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளின் அவல நிலையை ...

மேலும்..

வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் குறித்த ஊடக அறிக்கை வெளியீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாய தேவைப்பாடாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் ஓகஸ்ட் மாதம் 05ஆம் ...

மேலும்..

எனது ஒளிப்படத்தை பயன்படுத்த வேண்டாம்- ரஞ்சித் ஆண்டகை வேட்பாளர்களிடம் கோரிக்கை

எனது ஒளிப்படங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென கொழும்பு பேராயார் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் ஒளிப்படங்களை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தி ...

மேலும்..

தமிழ் சமூகம் குமார வடிவேல் குருபரனை ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது- கலாநிதி ஞானசீலன்

வடக்கு கிழக்குச் சமூகம் கலாநிதி குமார வடிவேல் குருபரன்   ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார். என யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ...

மேலும்..

ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பயணித்த இரு வாகனங்களுக்கு சேதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயணித்த இரு வாகனங்களும் மஹரகமயில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  ...

மேலும்..

என்னிடமிருந்து பிள்ளைகளை பிரிக்காதீர்கள்- அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு பிரியா நடேஷ் உருக்கமான கோரிக்கை

நான் சுகயீனம் காரணமாக அடையும் வேதனையை காட்டிலும் பிள்ளைகளை பிரிந்திருப்பதனாலேயே பெரும் வேதனை அடைகின்றேன் என பிரியா நடேஷ் கவலை வெளியிட்டுள்ளார். எனவே அவர்களை என்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் இரு குழுவினருக்கு இடையில் மோதல்: ஒருவர் காயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் இரு குழுவினருக்கு இடையில்  மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெல்லவாய- செவனகல பகுதியில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த கூட்டத்தில்,ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வெல்லவாய அமைப்பாளர் உரையாற்ற ...

மேலும்..

ஹைலெவல் வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

மழையுடனான வானிலை காரணமாக கிருலப்பனை பேஸ்லைன் சந்தியில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஹைலெவல் வீதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை,தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்பிற்குள் நுழையும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை ...

மேலும்..

மட்டக்களப்பு தனியார் பண்ணை காணியில் தீ விபத்து

மட்டக்களப்பு- திராய்மடு பகுதியிலுள்ள தனியார் பண்ணை காணி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை) இரவு,  திடீரென  குறித்த பண்ணை காணி தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலுள்ள மக்கள், தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகரசபை தீயணைப்பு படையினர் ...

மேலும்..

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற ...

மேலும்..

தமிழர்கள் சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது – சிறீதரன்

தமிழர்கள் இனவிடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு ...

மேலும்..

தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, சர்வதேசத்தின் உதவியை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ...

மேலும்..

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவருக்கு கொரோனோ பரிசோதனை!

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவர், நீதிமன்றத்தின் அனுமதியுடன், கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடற்படையினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி ...

மேலும்..