பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது.
பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமில் 175 அகதிகளும் நவுருத்தீவு முகாமில் 185 அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக, அகதிகள் வைக்கப்பட்டுள்ள பப்பு நியூ கினியாவின் தலைநகரான Port Moresby-ல் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது.
முன்னதாக, கொரோனா பரவலை பப்பு நியூ கினியாவின் சுகாதார கட்டமைப்பைக் கொண்டு கையாள்வது போராட்டம் மிகுந்ததாக இருக்கும் என பப்பு நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே எச்சரித்திருந்தார்.
பல ஆண்டுகள் தடுப்பில் கழித்த நாங்கள் கொரோனா தொற்றால் எளிதாகப் ...
மேலும்..