September 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முன்னாள் இராணுவச் சிப்பாய் ‘ ஆமி கமல்’ ஹெரோயினுடன் மாட்டினார்! (photo)

பிரதேசவாசிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த  முன்னாள் இராணுவச் சிப்பாயான 'ஆமி கமல்' என அழைக்கப்படும் கமல் அருண ஷாந்த எனும் நபர் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரு இராணுவச்  சீருடைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிப்பண்ணைப் பொலிஸார் ஹேன்பிட்டிய ...

மேலும்..

அமைச்சர் மிகிந்தானந்த அழுத்கமகே இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.(photos)

அமைச்சர் மிகிந்தானந்த அழுத்கமகே இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தஅமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேயுடன் பண்யை மேம்பாடு மற்றம் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டிபி கேரத், நெல் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது.

உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது. மானிலமஙெ்கும் உளநலம் மற்றும் சில பழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான சேவைக்களுக்கென ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 14.75 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இது குறித்த விபரங்களை முதல்வர் டக் போர்ட்டும், உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான இணை அமைச்சர் மைக்கல் ...

மேலும்..

சி.வெங்காயம், வாழை, உழுத்து நிலக்கடலை பயிர்களுக்கு காப்புறுதி செய்ய நடவடிக்கை – கமத்தொழிலமைச்சர்!!

வடக்கின் விவசாய மறுமலர்ச்சிக்காக கெளரவ யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளிற்க்கு ஏற்ப யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அளுத்தகம அவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (15) இடம்பெற்ற விவசாயிகளுடனான ...

மேலும்..

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது? – தவிசாளர் நிரோஷ் கேள்வி!!

பட்டதாரி பயிலுனர் பயிற்சி செயற்றிட்டத்தில் இராணுவத்திற்கு தேவையற்ற தலையீட்டைக்கொள்கின்றமையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேள்விக்கு உட்படுத்துவதாக அதன்; தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்று அரச தாபனங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டவர்களின் பயிற்சி விடயத்தில் இராணுவத்தினர் பயிலுனர் வரவு ...

மேலும்..

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா – மனிதநேய உதவிகள்(photos)!

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது, இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் ...

மேலும்..

இன்று காலை நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில்  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது .

இன்று காலை நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில்  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது . சமூக ஆர்வலர்கள் , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ...

மேலும்..

100 ரூபாயால் அதிகரித்தது தேங்காயின் விலை!!

அடுத்த மாதம் முதல் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 85 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ...

மேலும்..

விக்னேஸ்வரன் மீதான வழக்கை விலக்கிக்கொள்ள டெனீஸ் மறுப்பு!!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் ...

மேலும்..

ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற உத்தரவு!!

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரஸ்தலங்களுக்குமான நடப்பு ஆண்டுக்குரிய வர்த்தக  அனுமதிப் பத்திரத்தை (Trade Licence) எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் ...

மேலும்..

கலாசார நிலையம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

இந்தி அரசின் நிதியில் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார நிலையம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14) வடக்குமாகாண ஆளுநர் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர ...

மேலும்..

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலையூற்று பகுதியில் 1997ஆம் ஆண்டு பதினோராம் மாதம் 27ஆம் திகதி இஸ்மாயில் லெப்பை இஸ்ஸதீன் என்பவரை கொலை ...

மேலும்..

நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று (15) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நோர்வூட் கீழ்பிரிவைச் சேர்ந்த செல்வராஜா பிரேம்சதீஸ் (வயது -24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து ...

மேலும்..

புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும் – கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்!

புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும் - கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in ...

மேலும்..

’20’ இற்கு ஐ.நாவும் எதிர்ப்பு!

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் இன்று ஆரம்ப உரையை ஆற்றும்போது அவர் இலங்கை அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அரசமைப்பின் ...

மேலும்..

தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15,மற்றும் 10 வயதுடைய சிறுவர்களுக்கு நெருப்பினால் கையில் சூடு வைத்த இருவர் விளக்கமறியலில்

திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15,மற்றும் 10 வயதுடைய சிறுவர்களுக்கு நெருப்பினால் கையில் சூடு வைத்த இருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று(15) உத்தரவிட்டார். பத்தினிபுரம்,பாலம்பட்டாறு,தம்பலாகாமம் பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும் – பலவீனமாகி விடுவோம் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மக்களால் நேற்று நடாத்தப்பட்ட வரேவேற்பு நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களால் தெரிவு ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரணிலின் மைத்துனரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பிரதித் தலைவர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.முன்னால் அமைச்சருக்கு முன்னால் ஊடக அமைச்சர்  ருவன்விஜேவர்தனவிற்கும் ...

மேலும்..

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் காயம்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் 15.09.2020 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(15/09/2020)

மேஷம் மேஷம்:  எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ...

மேலும்..

திலீபன் நினைவேந்தல் வளைவுகளை அகற்றிக்கொண்டு சென்றது பொலிஸ் – திருவுருவப்படங்களையும் விட்டுவைக்கவில்லை (photo)

யாழ்ப்பாணம் - நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர். தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் | புதிய கல்வியாண்டின் தொடக்கம்.

புதிய கல்வியாண்டின் தொடக்கம் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டை நாம் ஆரம்பிக்கும் இவ்வேளையில், மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளதை நான் அறிவேன்.  புதிய கல்வி ஆண்டின் ஆரம்பமானது இம்முறை மிகவும் வித்தியாசமானதாக அமையவுள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், அவற்றின் சிறப்புகளை எட்டவும் இந்த ஆண்டு வழிவகுக்கும். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது தமது குழந்தைகள் பாதுகாப்புடன்கூடிய கல்விச் சூழலில் தமது வகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் என்ற மன நிறைவை பெற்றோர்கள்  அடைவர். ஒன்ராறியோவின் பள்ளிகள் மீளத் திறக்கப்படும்போது பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முதன்மையான விடயங்கள் பின்வருமாறு: அனைத்துஊழியர்களும் மாணவர்களும் ஒவ்வொரு நாளும் தாங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் தமக்கான நோய் அறிகுறி பற்றிய சுய பரிசோதனையினை மேற்கொள்ளல் அவசியம். தமது உடல்நிலை சரியில்லை என உணர்ந்தால், அவர்கள் பள்ளிக்குச் செல்லாது வீட்டிலேயே இருத்தல் வேண்டும். கொவிட்-19நோய்த்தொற்று உள்ளதென சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ, பள்ளி நிர்வாகம் உடனடியாக அதுபற்றி அப்பகுதிக்கான பொது சுகாதார பிரிவுக்கு அறிவித்தல் வேண்டும். சந்தேகத்துக்குரிய அல்லது உறுதிப்பட்டுத்தப்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகளை ஒவ்வொரு நாளும் கல்விச்சபை பள்ளிச் சமுகத்துக்கும் ஒன்ராறியோ அமைச்சகத்துக்கும் அறிவித்தல் வேண்டும். நான்காம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறைகள், நுழைவாயில் பகுதி உட்பட பாடசாலை கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்படாவிட்டாலும்,  அவர்களும் முகக்கவசம் அணிவது சிறந்தது என ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்கு ஒன்ராறியோ மானிலம் பள்ளி நிர்வாக உதவி நிதியை அளிக்கிறது. மாணவர்களுக்குவேண்டிய சுகாதார விதிமுறைகளைப் பயிற்றுவிப்பதுடன், கை கழுவுதல் பற்றியும் அதற்கான இடைவேளைகளையும் பாடசாலை நிர்வாகம் வழங்கும். ஆசிரியர்களும் பள்ளிப் பணியாளர்களும் மேலதிகமான சுகாதார பாதுகாப்பு பயிற்சியை பெற்றுக்கொள்வர். ஒவ்வொருமாணவரும் பள்ளியில் நாள் முழுவதும் முடிந்தவரை ஒரே குழுவில் குறிப்பிட்ட ஆசிரியருடன் பயில ஊக்குவிக்கப்படுவர். மேலதிகமான ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதற்கென பணியில் அமர்த்தப்படுவர். பள்ளிகளுக்குஉடனடியாக உதவுவதற்கென 625 வரையான புதிய பொது சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் நோய்த்தடுப்பு, நோய்ப் பரிசோதனை, நோய்த்தொற்றைக் கண்டறிந்து அதற்கான தணிப்பு உத்திகளைக் கையாள்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். அனைத்துப்பாடசாலைகளும் நாள் முழுவதும் சுத்தம் செய்யப்படுவதை கவனித்துக்கொள்வதற்கென 1300 வரையான பாதுகாப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வேண்டிய துப்புரவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்துகளும் தவறாமல் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்உட்பட பள்ளிக்கு வருகை தருபவர்களுக்கான கட்டுப்பாடுகளை பாள்ளி நிர்வாகம் விதிக்கும். தரவுகளைப்பேணும் வகையில், மாணவர்களின் வருகைப் பதிவுகள், வகுப்பறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கை விபரங்கள், பேருந்தில் வருகை தரும் மாணவர்களின் விபரங்கள், அனுமதி பெற்று பாடசாலைக்கு வருவோர் விபரங்கள், தற்காலிக ஆசிரியர்களின் விபரங்கள் போன்றவற்றை பள்ளி நிர்வாகம் சேகரித்து வைத்திருக்கும். பெற்றோர்களின்தெரிவுகளுக்கு மதிப்பளிக்கப்படும். 2020-2021 கல்வியாண்டின்போது  அனைத்து நிலை பாடசாலைகளிலும் நேரடியாக மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிப்பது அவர்களின் விருப்பத் தெரிவாக அமையும். வகுப்புகளுக்கு நேரடியாக சமூகமளிக்காது வெளியில் இருந்து கல்வி பயிலக்கூடிய பல வசதிகளை ஆண்டு முழுவதும் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும்வேளையில்,பெற்றோர்களும் ஆசிரியர்களும்  சமுகத்தில் உள்ள பள்ளிகளிலும் குழந்தை பராமரிப்பு மையங்களிலும், கொவிட்-19 தொற்றுகளை விரைவாக கையாள்வதற்கு ஏதுவான சூழ்நிலையை நாம் உறுதிப்படுத்துகிறோம்.      

மேலும்..

தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் – தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்.

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி – சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது ...

மேலும்..