September 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாவலடி மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியில் பல வருடங்களாக மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த கிராமமாகும்.இப்பகுதியில் ஒரு பகுதி கடலாகவும் ஒரு பகுதி மட்டக்களப்பு வாவியினையும் கொண்ட பகுதியாகவும் காணப்படுகின்றது. இப்பகுதியில் ...

மேலும்..

ஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்பவே முடியாது ராஜபக்ச அரசு – அநுரகுமார சுட்டிக்காட்டு!!!

"ஐ.நா. தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும் ஐ.நா. மனித சபையின் உறுப்புரிமை நாடுகளில் இலங்கை தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு நிராகரித்தாலும் ஐ.நா. வைத்துள்ள பொறியில் இருந்து ஒருபோதும் தப்பவே ...

மேலும்..

ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது – அரசின் செயல் தொடர்பில் சஜித் விசனம்!

"இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்து ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் ...

மேலும்..

கொடுங்கோல் ஆட்சி: நிரூபித்துள்ளது ஐ.நா. – போட்டுத் தாக்குகின்றார் மங்கள!!

"இது நடுநிலையில்லாத ஆட்சி. நீதி தவறிய அநீதியான ஆட்சி. கொடுமையும், அட்டூழியமும் நிறைந்த ஆட்சி. ஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்சி கொடுங்கோல் ஆட்சி. இதை நிரூபிக்கும் வகையில்தான் ராஜபக்ச அரசு மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன." - இவ்வாறு முன்னாள் ...

மேலும்..

ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க கூடாது; நீதிமன்ற தடைக்கட்டளை கையளிப்பு!!!

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்அவர் சார்ந்த குழுவினர் இம்முறை 18.09.2020தொடக்கம் 26.09.2020வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடைக்கட்டளை உத்தரவைப்பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகர் இது விடயம் ...

மேலும்..

ஹொரவ்பொத்தான, திம்பிரியாதாவெள கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் நேற்று(18) ஜும்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய அல் ஹிமா சமூகம் சேவைகள் அமைப்பின் ஊடக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் நூரானியா ஜும்ஆ பள்ளிவாசல் எனும் பெயரில் இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சபையின் தலைவர் T.A சுபஹான் மௌலவி தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

மட்டக்களப்பு,செங்கலடியில் விபத்து ஒருவர் பலி: ஒருவர் காயம், உணவகம் ஒன்றிற்கும் சேதம்!!!

மட்டக்களாப்பு - செங்கலடி பிரதான வீதியில் இன்று மாலை (18) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பகுதியில் இருந்து முறக்கொட்டாஞ்சேனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று வேகக் ...

மேலும்..

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது ஆளுங்கட்சி – ஒப்புக்கொண்டார் மனோ!!!

தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி அழைப்பு விடுத்துள்ளமையை முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அரசியலில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(19/09/2020)

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு. வரும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கின்றார் மைத்திரி!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என்று கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் மற்றும் பெண்கள் அணியினரை மையப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ...

மேலும்..

இலங்கை அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள்

மேலும்..

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 355 பேர் சிக்கினர்.!

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 355 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 208 பேரும், சட்ட விரோத மதுபானத்தை வைத்திருந்த 106 ...

மேலும்..

அட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அதிகாரிகளினால் பணிப்பு!

மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்வதன் காரணமாக மலையகத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.. அத்தோடு, கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்படுகின்றது. அந்தவகையில் அட்டன் பொலிஸ் ...

மேலும்..

சபாநாயகர் யாப்பாவுடன் அமெரிக்கத் தூதர் பேச்சு! (photos)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் USAid- இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெப்ரி சனின் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற செயலாளர் ...

மேலும்..

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு முயற்சி: கூட்டமைப்பும் கூட்டணியும் நேரில் பேச்சு!!!

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து ராஜபக்ச அரசின் அராஜங்களுக்கு எதிராகப் போராடும் முயற்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள இரண்டாம் கட்டச் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் பங்குகொண்டுள்ளனர். கடந்த வாரம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழரசுக் ...

மேலும்..

தமிழ் மக்கள் இயக்கமாக பேரவை இயங்க வேண்டும். இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகும் காரணத்தை விளக்குகின்றார் “விக்னேஸ்வரன்”.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார். "தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும்போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் ...

மேலும்..

2009ல் இருந்து பல அரசாங்கம் மாறிவிட்டது மீள்குடியமர்வு தொடர்பில் நிரந்தர தீர்வு இல்லை – அங்கஜன்!!!

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ( 17 ) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இன்று (18) நலன்புரி நிலையங்களில் வசித்து சொந்த காணி ...

மேலும்..

கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கையை தீர்த்து வைத்த சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழக மைதானத்திற்கு விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையான மின்னொளி பொருத்துவற்கான தூண்கள் வேண்டும் என கோரினர். அதற்கமைய ...

மேலும்..

கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை!!!

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நடவடிக்கை கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர வழிகாட்டலில்  கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையின் பிரகாரம் ...

மேலும்..

மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி வீதியில் இறங்கிய பெற்றோர்!!!(photos)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி ஓட்டமாவடி 01 ஹ{தா பள்ளிவாயல் வீதியினை விஸ்தரித்து மாணவர்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களை தடுக்க கோரி பெற்றோர்களால் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் மாணவர்களை ...

மேலும்..

மத்திய முகாம் பிரதேசத்தில் மூன்றாம் போக பாசிப்பயறு அறுவடை விழா!

விவசாய திணைக்களம் அண்ணமலை(மாகாண இடை)விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் மூன்றாம் போகமாக வயல் நிலங்களில் செய்கை  பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா நிகழ்வு இன்று(18) மத்தியமுகாம்-4 பிரிவில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீரின் வழிகாட்டலுக்கமைய களப்பயிர் ...

மேலும்..

‘இம்சை’யில் ஈடுபடும் மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவர் – யாழ். பல்கலை துணைவேந்தர் உறுதி (photos)

"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்கள் மீது 'இம்சை'யில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள்." - இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய வழி பாலியல் பகிடிவதை தொடர்பில் ...

மேலும்..