June 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 04 பேர் தொற்றாளராக அடையாளம் 

நூருல் ஹுதா உமர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன்  ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார ...

மேலும்..

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் விஷேட வர்த்தமானி அறிவித்தல்

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு ...

மேலும்..

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் ...

மேலும்..

கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ,பொலிஸார் நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர் குறித்த ஸ்டிக்கர் ஒரு நாளைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஒரே வாகனத்தை மீண்டும், ...

மேலும்..

பியுமி ஹன்சமாலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி குறித்த பிறந்தநாள் கொண்டாடத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து ...

மேலும்..

யாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை ...

மேலும்..

தபாலகங்கள் அனைத்து நாளை திறப்பு

இந்த மாதத்துக்குரிய பொதுமக்களின் கொடுப்பனவுகளை செலுத்துதல், மருந்துகளை விநியோகித்தல் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட கடமைகளுக்காக, நாளை (3) தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள தபாலகங்கள், உப தபாலகங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வரும் பயனாளிகளுக்காக குறித்த கொடுப்பனவுக்கான அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை ...

மேலும்..

கொரோனா தொற்றின் ஆபத்தறிந்து மக்கள் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும் : சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் !

(நூருல் ஹுதா உமர்) நாட்டில் வேகமாக அரிகரித்துவரும் கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். கடந்த காலங்களில் மக்கள் தந்த ஒத்துழைப்பினாலையே இந்த மூன்றாம் அலையில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ...

மேலும்..

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆலையடிவேம்பிலும் ஆரம்பம்

கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தின் பொருட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் திட்டம் இன்று தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழிச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட்-19 மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. விபரம் இணைப்பு

மேலும்..

தீக்கிரையான கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில்மூழ்க தொடங்கியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் ஒரு பகுதிக்குள் நீர் செல்ல தொடங்கியுள்ளதால் கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. தீயை பெருமளவிற்கு கட்டுப்படுத்திவிட்டோம் ஆனால் கப்பலின் சில பகுதிகள் மூழ்க ஆரம்பித்துவிட்டன என கடற்படை பேச்சாளர் ...

மேலும்..

இம்மாதம் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இவ்வருடத்தினுள் 50 மில்லியன் பைஸர் கொவிட் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன் முதல் தொகுதியாக 3 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இம்மாதமளவில் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும்..

யாழ் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ் ஊசி ஏற்றும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், ஏனைய பீடங்களில்500 பேருக்கும் மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா ...

மேலும்..

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன ஊறணி பகுதியை நாளை திறக்க பரிந்துரைப்பு

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை (03) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (2) ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று காலை 10 மணியில் இருந்து இன்று காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...

மேலும்..

இந்திய லட்சத்தீவு இறைநேசர்களின் புனிதபூமியை பாதுகாக்க பிரார்த்தனை புரிவோம் : ஹரீஸ் எம்.பி 

ஆன்மிகத்தில் உச்சகட்ட பேணுதல்களை கொண்ட லட்சத்தீவு பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனையுடன் லட்சத்தீவின் மகிமையை சீரழிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் ஆடம்பர உல்லாச விடுதிகளையும், கசினோ நிலையங்களையும் அமைத்து மதுபாவனைக்கான வசதிகளையும் உண்டாக்கி மிகப்பெரும் நாசகார திட்டங்களுடன் கூடிய ...

மேலும்..

அரசியலுக்காக பேதங்ளைப் பேசி அதிகாரங்களை அடைந்து கொள்ளும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை : ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி

(நூருல் ஹுதா உமர்) இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம் அன்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக இருந்தபோது, முஸ்லிம் மாணவர்கள் பலருக்கு மூத்த ...

மேலும்..

மரக்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல ...

மேலும்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் -பெண் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர்  வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில், காயமடைந்த பெண், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்துள்ளார். இதன்போதே குண்டு வெடித்துள்ளது. அவருக்கு ...

மேலும்..

காலையில் சூரியன் உதிப்பதற்கும் சீனாவே காரணம் என்று சொல்லும் நிலையில் எதிர்க் கட்சிகள் உள்ளன – பாரத் அருள்சாமி

(க.கிஷாந்தன்) அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொவிட் இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி கூறியுள்ளார். அட்டனில்  (01) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ...

மேலும்..

பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் ...

மேலும்..

தேங்கியுள்ள மரக்கறி மற்றும் பழ வகைகளை உள்ளூர் வர்த்தக நிறுவனங்களிற்கு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் – அங்கஜன் இராமநாதன் விவசாயிகளிற்கு உறுதி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கோவிட் - 19 இடர்காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்பை இழந்து தவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அவர்கள் எதிர்கொள்ளும் மேலதிக பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதன்போது ...

மேலும்..

கொரோனா பயணத்தடையை மீறி சாய்ந்தமருது பகுதியில் நடப்பது என்ன?

(பாறுக் ஷிஹான்) நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. எனினும் சிலர் சுகாதார நடைமுறைகளையும் ...

மேலும்..

கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்லும் பணி ஆரம்பம்

எம் வீ எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்

மேலும்..

வீதிகளில் உலாவி நோய்க்காவிகளாக மாறிவிடாமல் வீட்டில் குடும்பத்தாருடன் இருந்து கொள்ளுங்கள் :  இளைஞர்களுக்கு தவிசாளர் றாஸிக் ஆலோசனை !

(நூருல் ஹுதா உமர்) இளைஞர்கள் உல்லாசமாக இருந்து பழகியவர்கள் என்பதனால் கொரோனா தொற்றை மறந்து கவனயீனமாக செயற்படுவது எல்லோருக்கும் அசௌகரியத்தை உண்டாக்கி விடும். வீட்டில் உள்ள குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் என பலரையும் மனதில் கொண்டு வெளியில் உலாவித்திரிந்து நோய்க்காவிகளாக நாங்கள் மாறிவிடாமல் ...

மேலும்..

பழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுங்கள் -சாணக்கியன்

பழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க பிள்ளையானும், வியாழேந்திரனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..