July 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் புதிய தலைவர் துமிந்தசில்வா

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்தசில்வாவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.

மேலும்..

காரைதீவில் வாகன விபத்து

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் காரைதீவு கமநல சேவைகள் காரியாலயத்திற்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை ...

மேலும்..

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதே தனது முதல் குறிக்கோள்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அத்தியாவசியப் பொருட்களின் விலையை விரைவில் குறைப்பதே தனது முதல் குறிக்கோள் என்றும் கூறினார். உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கையை விடுத்தார். ஒரு ...

மேலும்..

கடற்றொழில் அமைச்சருக்கு திராணி இருந்தால் கடலட்டைப் பண்ணைக்கு என்னென்ன அனுமதி எப்போது வழங்கப்பட்டது என வெளியிடட்டும்-சிறிதரன்

அட்டைப் பண்ணைகள் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்ற இந்த கும்பல் முதலில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தி சட்டத்தின் படி நீதியின் படி உரிய ஆவணங்களை திராணி இருந்தால் நான் இப்பொழுதும் கடற்றொழில் அமைச்சரிடம் சவால் விடுகிறேன் அவருக்கு திராணி இருந்தால் அவர் ...

மேலும்..

கல்முனைப்பிராந்தியத்தில் மூன்று பேர் கொரோனாவால் மரணம்

கடந்த 24மணிநேரத்தில் கல்முனைப்பிராந்தியத்தில் மூன்று பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். 65 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர் என்று கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்றுப்பிரதேசத்தைச் சேர்ந்த 70 மற்றும் 74வயதுடைய இருவரும் பொத்துவிலைச் சேர்ந்த 94 வயது வயோதிபரொருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பொத்துவில் பிரதேசத்தில் ...

மேலும்..

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம் – டிலும் அமுனுகம

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும் செல்லக்கூடிய வகையில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இன்று (17) முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரம் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓகஸ்ட் ...

மேலும்..

நோய்வாய்ப்பட்டு காட்டுயானை ஒன்று உயிரிழப்பு

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பிரிவில், பெரியகுளம் வயல்வெளியில் நோய்வாய்ப்பட்டிருந்த காட்டுயானைஒன்று இன்று உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் காட்டுயானை ஒன்று நோய்வாய்ப்பட்டு வயல்வெளியில் வீழ்ந்தநிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவரசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர். இந் நிலையில் ...

மேலும்..

ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டம்

(க.கிஷாந்தன்) சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இலவசக் ...

மேலும்..

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் விடுவிப்பு

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரடங்கிய குழுவினர் 16.07.2021நேற்று இரவு 09.00மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கேப்பாபுலவு விமானப்படை முகாமிலிருந்து வெளியேறியுள்ளனர். கொத்தலாவல ...

மேலும்..

பெசில் ராஜபக்ச, சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசர அவசரமாக சந்தித்துள்ளார். நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று கூறுகிறார். அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார். புதிய நிதியமைச்சரின் கருத்து சரிதான். ஆனால், சர்வதேச நாடுகளை ...

மேலும்..

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம்

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களின் தளர்வு என்பது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ...

மேலும்..

410 மூடை சிப்பிக​ளுடன் மூவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கொள்கலன் பாரவூர்தியில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பிக​ள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் இன்று (17) அதிகாலையில் வாழைச்சேனை நாவலடி சந்தியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் ...

மேலும்..

வவுனியா வாசியைக் காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு உறவுகள் வேண்டுகோள்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவந்த முதியவர் ஒருவரை காணவில்லை என அவரது குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 66 வயதான அன்ரன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுகவீனமடைந்திருந்த ...

மேலும்..

சூழகம் அமைப்பினால் ஊரதீவு , கேரதீவில் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு

 . சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்  ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்  புங்குடுதீவு  ஏழாம் வட்டாரம் ஊரதீவு பகுதியிலும் , ஐந்தாம் வட்டாரமான  கேரதீவு பகுதியிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இப்பகுதிகளில் வாழ்கின்ற  பொதுமக்களின்  வேண்டுகோளுக்கிணங்க  மயானங்களை சூழ்ந்து ...

மேலும்..

வடக்கு கிழக்கிற்கு விசேட கொரோனா தடுப்பூசி திட்டம்-நாமல்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு – கிழக்கு ...

மேலும்..