November 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ...

மேலும்..

வவுனியாவில் பேருந்து – டிப்பர் மோதி கோர விபத்து..! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து மற்றும் கனரகவாகனம் (டிப்பர்) மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (24) காலை 5.30 ...

மேலும்..

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை ...

மேலும்..

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நாளை (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ...

மேலும்..

எவரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது. அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி ...

மேலும்..

சாமிகவிற்கு ஒரு வருட தடையும் அபராதமும்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சமிக கருணாரட்ணவிற்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் 5000 அமெரிக்க டொலர் அபராதத்தையும் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  மேலும் தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: ஜேர்மனியை வென்றது ஜப்பான்

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.இடைவேளையின் போது ...

மேலும்..

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பணத்தினை மோசடி செய்தாக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு ...

மேலும்..

கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதி வீடொன்றில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (22/11/2022) மாலை கொள்ளை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான தங்கத்தோடு இரண்டு ஒரு பவுன், இருபதாயிரம் ரூபா பணம், முப்பது அங்கர் பால் மா பெட்டி ஆகியன கொள்ளை ...

மேலும்..

இராஜாங்க அமைச்சரை எம்.பி என்று அழைத்த சபாநாயகர் கோபமடைந்த இராஜாங்க அமைச்சர்

சமீப காலங்களில் பெறுமதியான பேச்சுக்களை விட அதிக சண்டைகளையும் வாதங்களையும் எதிர்கொள்ளும் இடமாக மாறியிருக்கிறது இலங்கையின் பாராளுமன்றம், இன்று சபாநாயகர் எம்.பி என்று அழைத்ததற்காக அரச அமைச்சர் ஒருவர் கோபமடைந்து தர்க்கத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது . இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் ...

மேலும்..

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்!

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி அசத்தியுள்ளது. அர்ஜென்டினா-சவுதி அரேபியா மோதல் கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ...

மேலும்..

ADK பற்றி ஷிவினின் குற்றச்சாட்டு: கொந்தளிக்கும் இலங்கை பெண்

பிக்பாஸ் நீதிமன்றத்தை ஷிவின் நேற்று அவமதித்ததாக ஜனனி குற்றம் சுமத்தியுள்ளார். வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் கடந்த ஐந்து வாரங்களாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆறாவது வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

இன்று கார்த்திகை அமாவாசை! சகல செல்வங்களை பெற இதை கண்டிப்பா செய்திடுங்க

இன்று கார்த்திகை அமாவாசை என்பதால் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் திதி கொடுத்தால் பித்ருதோஷம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். நாளை காலை 4.50 மணிவரை இருக்கும் இந்த அமாவாசை நாட்களில் நாம் செய்யவேண்டியதைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். கார்த்திகை அமாவாசை இன்று ஆறு, குளங்களில் புனித ...

மேலும்..

மோசமான உடல்நிலை! மருத்துமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட சமந்தா?

நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் ...

மேலும்..

வருங்கால கணவருடன் ஹன்சிகா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படம்! குவியும் லைக்ஸ்

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ஹன்சிகா கோலிவுட்டில் சினிமாவில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவருக்கும் ஹோஹைல் கதூரியா என்ற தொழிலதிபருக்கும் வரும் டிசம்பர் ...

மேலும்..

அனல் பறக்கும் ஓட்டிங்! அதிரடியாக வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்.. ஷாக்கில் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. இது போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கும் விதமாகவே இருந்தது. மைனா இந்த வாரத்தின் தலைவராக உள்ளார்.   இந்த வாரம் தனலட்சுமி, அசீம் ...

மேலும்..

கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்கவிற்கு பிணை – ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள்

பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரனி முன்வைத்த பிணைமனு கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான 20க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரரான  தனுஷ்க குணதிலக்க, பெண் ஒருவரை பலவந்தமாக ...

மேலும்..

நாட்டிற்கு டொலரை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பதவி துறப்பேன் – சூளுரைத்த உறுப்பினர்!

நாட்டை விட்டு ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ரத்தின கற்கள் வெளியேறியுள்ளதாகவும், ஆனால் 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடிக்கு கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தமிழ்த் தேசியகூட்டமைப்பும் காரணம் என குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான மஹிந்தானந்த அளுத்கமகே, கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டங்களில் கடன் பெற்று நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ரணிலை சந்தேக கண்ணுடன் பார்க்கும் சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே தாம் பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் ...

மேலும்..

உணர்வுபூர்வமாக ஆரம்பமானது நினைவேந்தல்

யாழ்ப்பாணம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் நேற்று (21) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார். தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை ...

மேலும்..

தேயிலை இலைகளுடன் கலந்ததாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருள் தொடர்பில் விஷேட விசாரணைகள்

தேயிலை இலைகளுடன் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வகை இரசாயனப் பொருள் தொடர்பில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் திகதி தினியாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் இருந்து 2000 கிலோ ...

மேலும்..

அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் 2,000 மெட்ரிக் தொன் சீனாவுக்கான வாழைப்பழ ஏற்றுமதியை இலங்கை இழந்தது

மாதாந்தம் 2000 மெட்ரிக் தொன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்காக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, 150 வாழை விவசாயிகளின் விவரங்கள் சீன அரசாங்கத்திடம் வழங்கப்பட்டன, மேலும் ...

மேலும்..

4,000 தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு!

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய ...

மேலும்..

ஆசிரியைகள் சேலை அணிவதை கட்டாயமாக்கும் புதிய சுற்றறிக்கை இன்று

பாடசாலை ஆசிரியைகள் சேலையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு கடமைக்காக வர முடியாது என பொதுநிர்வாக அமைச்சு இன்று (நவ.23) சுற்றறிக்கையை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். பல பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு ...

மேலும்..

திடீர் தீ விபத்தில் லயன் குடியிருப்பு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் குடியிருப்பொன்றில்  நேற்று மாலை (22) ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தத் தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த  அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகின.  ...

மேலும்..

சவூதி – ஆர்ஜென்டீனா போட்டியில் காயமுற்ற வீரரை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்ட சவூதி இளவரசர்

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் சவூதி அரபியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக கோல் காப்பாளரின் முழங்கால் பட்டு கீழே விழுந்த சவூதி அரேபிய தேசிய அணி வீரர் யாசர் ...

மேலும்..

இ.தொ.காவின் போசகரும், முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் காலமான செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னார் 1943.07.20 ஆம் திகதியன்று உடப்புசல்லாவ ரப்பானை தோட்டத்தில் பிறந்து, ஆரம்பக் கல்வியை உடபுசல்லாவ வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை ...

மேலும்..

மற்றுமொரு பொதுப் போராட்டத்தை நடத்த இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

அரசாங்கத்தை மாற்றும் நோக்கில் மீண்டும் ஒரு பொதுப் போராட்டத்தை நடத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் ஆயுதப் படைகள் குவிக்கப்படும் எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் ...

மேலும்..

வீதியில் குறுக்கிட்ட நாய் : பொலிஸ் கான்ஸ்டபிள் பலி : மற்றுமொருவர் படுகாயம்

பாணமுர – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக  நாய் ஒன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமை இரவு சோதனையின் பின்னர் பனமுர பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ...

மேலும்..

செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுதிதருமாறு கோரிக்கை!!

யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்கள் பயன்படுத்தும் செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செம்மணி இந்து மயான அபிவிருத்தி சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (22) செம்மணி இந்து மயானத்தை ...

மேலும்..

அங்கஜன் எம்.பிக்கு சுதந்திரக் கட்சியில் புதிய உயரிய பதவி.

சாவகச்சேரி நிருபர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 21/11 திங்கட்கிழமை சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் ...

மேலும்..