முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேற்பிள்ளை இரத்தினசிங்கம் (முன்னை நாள் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்)

எமது குடும்பத்தின் தலைவரே ,
நீங்கள் எம்மை விட்டு அகன்று ஒரு வருடம் சென்று விட்டது. ஆனாலும் உங்கள் பிரிவுத் துயர் எங்களின் நெஞ்சங்களை விட்டு அகலவில்லை. அகலவும் மாட்டாது.
இறுதி மூச்சு உள்ள வரை எமக்கு கட்டளை இட்டு அறிவுரை கூறி எம்மை நற் பாதையில் வழி நடாத்திச் சென்றீர்கள்.
நீங்கள் இல்லாத காலத்திலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எமக்கு நல் அறிவுரைகள் சொன்னீர்கள்.
எமது தெய்வமே…!!!
மறு பிறவி என்ற ஒன்று இருந்தால் மீண்டும் நாங்கள் உங்கள் உறவுகளாக எப்படி இருந்தோமோ அப்படியே பிறக்க வேண்டும்.
சாய்ராம்…
என்றும் உங்கள் நினைவுடன்,
நாகேஸ்வரி (மனைவி -இலங்கை)
வசந்தி (மகள் -பிரான்ஸ்)
அருள் வரதன் (மருமகன் – பிரான்ஸ்)
வாசுதேவன் (மகன் – கனடா)
விமலசேகர் (மகன்- கனடா)
யோகராணி (மருமக்கள் – கனடா)
முல்லைச் செல்வி (மருமக்கள் – கனடா)
சந்தியன், விந்தியன் (பேரப் பிள்ளைகள் – பிரான்ஸ்)
சாயினி – (பேரப்பிள்ளை- கனடா)
பிருந்தா- (பேரப்பிள்ளை-கனடா)