மரண அறிவித்தல்
செல்வன். ரவிசந்திரன் ருமேஷ் (மாணவன் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி – 11)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2017/02/Untitled-1-copy-17-300x349.jpg)
திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், தெஹிவளை களுபோவிலையை சேர்ந்த செல்வன் ரவிச்சந்திரன் ருமேஷ் (17.02.2017) வெள்ளிக்கிழமை அகலமரணமானார்.
அன்னார் ரவிச்சந்திரன் – யோகலக்ஷ்மி (அரவிந்த் குரோசரி, களுபோவிலை, தெஹிவளை) தம்பதியரின் புதல்வனும், அரவிந்த், அபினேஷ் ஆகியோரின் அன்பு சகோதரனும், கம்பளை காலஞ்சென்ற அரவாண்டிப்பிள்ளை, சிவபாக்கியம், கம்பளை பன்விலதனை காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை, அழகம்மாள் தம்பதியரின் பேரனும், கதிரேசன், (ஸ்ரீ ராம் ஓட்டோ மொபைல்ஸ் ), சந்திரமதி, புரவிராஜன் (லண்டன்), காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை, அன்னலட்சுமி, காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதிதேவி, சௌந்தரராஜன் சரோஜாதேவி ஆகியோரின் பெறாமகனும் சுப்பிரமணியம், அம்சவள்ளி, இராஜமாணிக்கம், லீலா, காலஞ்சென்ற வைத்தியலிங்கம், நிர்மலா (நத்தம்கோவில்பட்டி ), காலஞ்சென்ற கல்யாணசுந்தரம், சுசிலாதேவி, சிதம்பரம், சந்திரா, பத்மநாதன், சிவகுமாரன், தர்ஷினி ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல 8 கௌடர் பிளேஸ், சரணங்கர வீதி, தெஹிவளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் (19.02.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி 11 மணியளவில் நல்லடத்திற்காக பூதவுடல் கொஹீவளை பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.