மரண அறிவித்தல்
திருமதி கதிராசிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை (சரஸ்வதி)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2015/03/lo-300x350.jpg)
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிராசிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 23-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசமூர்த்தி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, வைரமுத்து, மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பாக்கியம், கதிர்காமத்தம்பி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷாண், கோகுல், மாதுளன், யாதவன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்