மரண அறிவித்தல்
திருமதி கனகம்மா தர்மரெட்ணம்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மணல்தறை லேன் ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா தர்மரெட்ணம் அவர்கள் 20-06-2015 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவயோகசாந்தினி(கனடா), ஜீவசாந்தினி(சுவிஸ்), காலஞ்சென்ற அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, பாலசிங்கம், மற்றும் கனகரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நித்தியானந்தன்(கனடா), மாஷால்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பரமேஸ்வரி, பாக்கியம், பரமேஸ்வரன், நவரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமார், பிரபாகர்(ரமேஸ்), விக்கிரமன், விஜயன், அசோகன், சுரேஸ், கலா, கண் அன்ரி(மின்னல்கொடி) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
கெளரி, திலகா, றஞ்சி, பவா, தயா, பத்மபிரியா, திருமதி சுரேஸ் ஆகியோரின் அன்புச் சிறிய மாமியும்,
கிஷோர், கார்த்திகா, தர்மிகா, அபி, கணேஸ்சாந், யஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றமோன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் |
குடும்பத்தினர் |