மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை கணேசமூர்த்தி

யாழ்ப்பாணம்,துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு,சுதுமலை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை கணேசமூர்த்தி 12.08.2015 புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் கந்தையா கணேசமூர்த்தி (ஓய்வு நிலை யாழ் மாவட்ட முகாமையாளர் இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான உலகநாதர் -இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான கந்தையா-இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் சிவகுமார்(கனடா -project manager T.D,canada)பாலகுமார் (நியூசிலாந்து -Engineer) ஆகியோரின் அன்புத் தாயாரும் அனித்தா(கனடா),தேனுகா (நியூசிலாந்து)ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அபிலாஷ்(கனடா),அபிசேக் (கனடா),அபிதா (நியூசிலாந்து),ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான பத்மாசினி,ஞானாம்பிகை,அழகுஇரத்தினம் மற்றும் உலகேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை)பாலசுப்பிரமணியம்(இளைப்பாறிய நிலா அளவையாளர்) ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்றவர்களான கனகசபை,நடேசபிள்ளை ,இராசையா மற்றும் மதனகாமேஸ்வரி,காலஞ்சென்றவர்களான நடராசா(சிங்கப்பூர்),தியாகராசா,சிவராசா,மற்றும் , மகேஸ்வரி(மலேசியா),சாம்பமூர்த்தி(ஓய்வு பெற்ற ஆசிரியர்-புத்தூர்)சுந்தரமுர்த்தி (பிரான்ஸ்),Dr.ஈஸ்வரி,சிவஞானதேவி,ஆகியோரின் பாசமுள்ள மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சுதுமலை மத்தியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
கணவர்
சு.கணேசமூர்த்தி
சுதுமலை ரோட்
மானிப்பாய்.