முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி கீதா தண்டபாணி (அருணாசலம்)

தோற்றம்: 05. 06. 1961 மறைவு: 30. 04. 2013
திதி: 19. 04. 2014
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – சித்தன்கேணியைச் சேர்ந்தவரும், வறுத்தலைவிளானை வதிவிடமாகவும், பின் சுவிட்சர்லாந்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவம் எய்திய திருமதி கீதா தண்டபாணி (அருணாசலம்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனாலும் அழும் நெஞ்சம் ஆறவில்லை
களங்கமில்லா உனதன்பும் கலக்கமில்லா உன் நெஞ்சும்
என்றும் புன்னகைக்கும் உன் பாங்கும் பூந்தோட்டமாய் பூரிப்பாய்
ஆத்மபலம் உனதுமனம் இதமாகபேசுவாயே!
முற்பிறப்பில் செய்ததவம் இப்பிறப்பில் உனைக் கண்டோம்
இப்போ கண்களுக்கோ எட்டவில்லை கருத்திலும் கனவிலும் நிழலாடுகிறாய்…
ஆனாலும் அருகினிலே நீயில்லையே அம்மா ஆறுதலைப் பரிமாறி
எம்மனதைஆற்றிட துணையின்றித் தவிக்கின்றோம்…
உற்ற நண்பியென உனை நட்புறவும் தேடுதம்மா
இனி இப்பிறப்பில் மட்டுமல்ல ஜென்மம் என ஒன்றிருந்தால் நீயே வேண்டுமம்மா…
மலர்களையே நேசிப்பாய் இப்போ எங்கே நீ மலர்ந்திருப்பாய்?
உன் ஆத்மசாந்திக்காக ஆண்டவனை இறைஞ்சுகிறோம். கணவன், மகன், அம்மா, உடன் பிறப்புக்கள், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள்.
தகவல்: கணவன்