மரண அறிவித்தல்
திருமதி செல்லத்துரை அருந்தவநாயகி (கிளி)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அருந்தவநாயகி அவர்கள் 01-07-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முனிஐயப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பையா வள்ளியம்மையின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரி(மட்டக்களப்பு), கேதீஸ்வரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(கொழும்பு), சிவனிஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தாமோதிரம் பிள்ளை(தபால் அதிபர்), காலஞ்சென்ற செல்லத்துரை(அச்சக உரிமையாளர்), நாகபூசனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கதுரை(மட்டக்களப்பு), இராமச்சந்திரன்(நாதன்-சுவிஸ்), இராமலிங்கம், ராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியும்,
செல்வநாயகம் அவர்களின் மைத்துனியும்,
சுதர்சினி செல்வம்(பிரான்ஸ்), விஜிந்தன்(பிரான்ஸ்), முரளிதரன்(பின்லாந்து), ஜெயகெளரி(மட்டக்களப்பு), ஹீல்மியா(கொழும்பு), பெளவிந்தன்(அவுஸ்திரேலியா), மீறூஜா(அவுஸ்திரேலியா), நீறூஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எசெக்கியா, ஹீமாங்களி, கோவிந்தன்(பிரான்ஸ்), அபியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 03-07-2013 புதன்கிழமை அன்று மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுதர்சினி(பேத்தி)