மரண அறிவித்தல்
திருமதி மஞ்சுளா கிருபானந்தவாரி (அம்பிகா சில்க்ஸ்- G.T.A MALL)
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அம்மன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போது வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா கிருபானந்தவாரி அவர்கள் 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகள், மற்றும் வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நல்லையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு(அம்பிகாபதி பான்ஷி- யாழ்ப்பாணம்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருபானந்தவாரி(சின்னராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரோஜிதன், நிருஷாந், சிந்துஷன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மபாலன்(முன்னாள் அதிபர், கனடா), சியாமளா, பிறேமளா கிருஸ்ணபாலன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஷாமினி, ருஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதனராணி, தியாகராஜா, காலஞ்சென்ற தவராஜா, வித்தியா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரநாதன், மீனாம்பிகை, மற்றும் கனகசபாபதி, பத்மினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

