மரண அறிவித்தல்,
திரு ஆறுமுகம் கிருஷ்ணசாமி
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2013/07/Image-1-1-300x279.png)
நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி பியல்லாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஷ்ணசாமி அவர்கள் 28-06-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி. செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமரகுரு(டென்மார்க்), குலேஸ்வரி(சுவிஸ்), குமரேசன்(இத்தாலி), குமரேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெங்காதரன்(சுவிஸ்), நிஷாந்தினி(இத்தாலி), கார்த்திகேயன்(ஈசன்- இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சோமசுந்தரம், மனோன்மணி, செல்லம்மா மற்றும் பராசக்தி(இத்தாலி), காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கமலாம்பிகை மற்றும் சங்கரலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கனகம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் கந்தையா, சுப்பிரமணியம் மற்றும் கனகம்மா(இத்தாலி), கிருஷ்ணசாமி, பத்மராணி(டென்மார்க்), நாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்சனன், மதீசன், மதுமிதா, மதுஷ்ஜா, கபீசன், காருண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குமரேசன்(மகன்- இத்தாலி)