மரண அறிவித்தல்
திரு ஆழ்வார்ப்பிள்ளை பஞ்சலிங்கம்

தென் புலோலி விதானை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார்ப்பிள்ளை பஞ்சலிங்கம் அவர்கள் 16-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை(சமாதனநீதவான், வைரமுத்துமில்- மந்திகை) சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், கந்தசாமி ராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராணி(நோர்வே), சிவலிங்கம்(லண்டன்), சண்முகலிங்கம்(சுவிஸ்), சித்திவிநாயகலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிதம்பரசோதிலிங்கம், கலாபவானி(அவுஸ்திரேலியா), வைரமுத்து(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராமச்சந்திரன்(நோர்வே), வளர்மதி(லண்டன்), சியாமளா(சுவிஸ்), சாருமதி(அவுஸ்திரேலியா), ஸ்ரீமனோபவன்(அவுஸ்திரேலியா), சிவானந்தராஜா(டுபாய்), பாலமுரளி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருசாந், கிருஜா, தினேஸ்சாந், சனாதனன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஹரிணி, கிஜானி, வைஸ்னவன், பிருந்தன், பிரதீஸ், நிவேதிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்