மரண அறிவித்தல்
திரு இராயப்பு பாக்கியநாதர்

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பாக்கியநாதர் அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் மார்கிறேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மொணிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, நெல்சன், யான்சி, ஜெமீலா, வில்பிறெட், அல்பிறெட், டொறின், பாமினி, ஜெசி பொஸ்கோ, காலஞ்சென்ற றெஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பாட்டானாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 29-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று இல:29, வேம்படி வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் இரவுபோசனத்திலும்,அனைவரும் கலந்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜெமிலா பிரபாகரன் (மகள்,மருமகன்)