மரண அறிவித்தல்
திரு இளையதம்பி இரத்தினசிங்கம் (முன்னாள் பொது முகாமையாளர்(GM) – ப.நோ.கூ சங்கம்)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2017/08/rip-5-300x350.jpg)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ஜினேந்திராதேவி(யசோ), தவேந்திராதேவி(சுதா), கருணைவேல்(லண்டன்), தர்ஜினி(சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தணிகாசலம், மற்றும் ஈஸ்வரி செல்வசரஸ்வதி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற சிவராசா, பாக்கியலட்சுமி, பரராசசிங்கம்(பரா), காலஞ்சென்ற தர்மலிங்கம், செல்வநாயகம்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கங்காதரன்(சட்டவாளர்), வைதேகி(லண்டன்), பிரசாத்(மூங்கிலாறு ஆதாரவைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிரக்ஷன், கிருசிகா, கயாணன், மஞ்சரி, அகவன், ஹரிபவன், தக்சவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பிரசாத்(மருமகன்) |