மரண அறிவித்தல்
திரு கந்தையா புண்ணியமூர்த்தி (ஓய்வு பெற்ற தபால் அதிபர்)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2016/03/dsfhyshjkghujkyju-300x352.png)
யாழ்ப்பாணம் – மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா கற்குழியைத் தற்கால வசிப்பிடங்களாகவும் கொண்ட திரு. கந்தையா புண்ணியமூர்த்தி 03.03.2016 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா- மனோன்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் – செல்லம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
மனோரஞ்சிதத்தின் அன்புக் கணவரும்,
தர்மராஜன் (பொறியியலாளர் – கனடா), ஆனந்தராஜன் (கணக்காளர் – மவுன் பி(B)றீஸ் ஹொட்டல் – கொழும்பு) , இந்திராணி (வவுனியா) , ஜெயராஜன் (மென்பொருள் பொறியியலாளர் – லண்டன்), ரவிராஜன் (பேராசிரியர், பௌதீகவியற்றுறைத் தலைவர்- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம் காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி (கனடா), தயாளினி (ஆசிரியர் -சென் ஜோன்ஸ்- கொட்டகேனா), ஸ்ரீ கணேஷ் (சிரேஷ்ட உதவி முகாமையாளர்- ஸ்ரீ லங்கா டெலிகொம் வவுனியா), ஞானகுமாரி (லண்டன்), வாசுகி (ஆசிரியர் – யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜானி , சரண்யா, ஜாதவன் (3 ஆம் வருட மாணவன் SLIIT ), ஜாவன்னியா, பிரசாந்தினி (செய்முறைக் காட்டுனர்- விலங்கியல் துறை யாழ். பல்கலைக்கழகம்), கீர்த்தனா, சாய்ஸ், ஆகாஷ், சர்வேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நற்குணசிங்கம், பரமேஸ்வரி, ஜெயலட்சுமி, தனலட்சுமி, நாகராஜா, மகேந்திரராஜா, தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ் சென்றவர்களான கந்தசாமி, சற்குணசிங்கம் மற்றும் ஆறுமுகம், மாலதி தேவி, லதா ஆகியோரின் சகலருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப.11.00 மணியளவில் 92, கற்குழி, வவுனியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இறம்பைக்குளம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
ஸ்ரீ கணேஷ் : 071 236 1591
024 222 2529
ஆனந்தராஜன் : 071 184 0657
ரவிராஜன் : 071 856 1715