மரண அறிவித்தல்
திரு.சபாபதிபிள்ளை தர்மலிங்கம்

மரண அறிவித்தல்
வேலணை கிழக்கு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம் (ஓய்வு பெற்ற கணக்காளர்-தனியார் துறை ) நேற்று (12.06.2015) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சபாபதிப்பிள்ளை -செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான முருகேசு – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ராஜேஸ்வரியின் அன்பு கணவரும் கோமதி (திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் – நல்லூர் ), லோஜன் (துபாய்), தர்சினி (கணினிப்பயிற்றுனர் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஸ்ரீகாந்தன் , ஜீவா ஆகியோரின் அன்பு மாமனாரும் நோஷி கன் , கர்சனா , சஷ்ரிகன் ஆகியோரின் அன்புப்பேரனும் காலம் சென்ற அன்னலட்சுமி மற்றும் அமிர்தலிங்கம் (அவுஸ்திரேலியா ), கமலாம்பிகை (கனடா), செளந்தரம் ( ஜேர்மனி ) ஆகியோரின் அன்பு சகோதரனும் ராஜேஸ்வரன் (லண்டன் ), யோகேஸ்வரன்(ஜேர்மனி), மதுரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ரட்ணம் (கொழும்பு ), ஆனந்தசோதி (ஜேர்மனி), ஆனந்தவானி (ஜேர்மனி), சதா (ஜேர்மனி), ரவி (கனடா), ரகு (கனடா), காலம்சென்ற பத்மதாஸ் மற்றும் தவேந்திரா(கனடா), யுவேந்திரா (கொழும்பு ), ஆகியோரின் அன்பு மாமனாரும் சுகந்தினி, சிறிகரன்(அவுஸ்திரேலியா ), பிருந்தன் (அவுஸ்திரேலியா ), பிரேமி (அவுஸ்திரேலியா ), ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.06.2015) ஞாயிற்றுக்கிழமை பி.ப ஒருமணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
இல : 64 சங்கரப்பிள்ளை வீதி
ஆனைக்கோட்டை
தகவல்-குடும்பத்தினர்