மரண அறிவித்தல்
திரு சிவகுரு கந்தையா

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு கந்தையா அவர்கள் 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமாரசாமி சேதுப்பிள்ளை, நடராசா செல்லாச்சி, கைலாயபிள்ளை அபிராமி, விசாலாட்சி செல்லையா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜலஷ்மி(சுவிஸ்), சிவபாலன்(ஜெர்மனி), காலஞ்சென்ற கோபாலன், பிரபாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னராஜன்(விக்கி- சுவிஸ்), வாசுகி(ஜெர்மனி), ரேணுகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருணாசலம்(கிராம்புவில்- சாவகச்சேரி), காலஞ்சென்ற காமாட்சி, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புனிதவதி பேரம்பலம், நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிருந்தன், பிரியந்தி, பிரவீண், பிரணியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 47,
Rue Guiglionda de,
Sainte-Agathe,
06300 Nice,
France.
தகவல்
குடும்பத்தினர்