மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் ஜெகநாதன் (ஓய்வுபெற்ற களஞ்சிய காப்பாளர்- காணி அபிவிருத்தி திணைக்களம்)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2016/02/funeral-01-Recovered-2-300x352.jpg)
மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் ஜெகநாதன் (ஓய்வுபெற்ற களஞ்சிய காப்பாளர்- காணி அபிவிருத்தி திணைக்களம்)
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஜெகநாதன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
நாகரத்தினம்(வழக்கம்பரை அம்மம்மா- ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை, முன்னாள் தலைவி, மானிப்பாய் சத்தியசாயி நிலையம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியபாமா(பாமா- லண்டன்), சிவகுமார்(ரஞ்சன்- லண்டன்), சுந்தரகுமார்(கரன்), ஜெயக்குமார்(குகன்- லண்டன்), விஜயலக்ஷ்மி(விஜயா- லண்டன்), ஜெனலக்ஷ்மி(ஜெனா- லண்டன்), ஜெனக்குமார்(லவன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாசன்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
இரட்ணசபாபதி(லண்டன்), சிவகௌரி(ஜீவா- லண்டன்), மலரினி, கௌஷல்யா(கொழும்பு), சிவேந்திரன்(லண்டன்), கணேஸ்வரன்(கணேஸ்- லண்டன்), சாரதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேதரத்தினம் கெங்காதரம்(இருபாலை), தங்கரத்தினம் இராமசிவம், மற்றும் முத்துக்குமாரசாமி(அப்பர்- வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), திலகவதி, காலஞ்சென்ற சிவஸ்ரீ சுந்தரராஜ குருக்கள்(வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), விஜயலக்ஷ்மி, இராசரத்தினம்(இராசாத்தி), ஜெயரட்ணம்(கனடா), காலஞ்சென்ற திருஞானசம்பந்தர்(துரை), லோகநாயகி(சந்திரா), தெய்வகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதி(லண்டன்), ரவி(லண்டன்), ஷீலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
பத்மாவதி(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும்,
ஷாயினி மயூரன், ஷிவானி பிரணவன், பிரேமசாயி, வீஷ்பன், கிருஷன், சர்யிமா, விபூஷன், அஷ்வின், பிரவீன், சொனாலி, சிவேஷன், ஜனுஷன், கபர்தினி, லக்ஷன், ஆதிகீர்தனன், சௌமியா, மேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷகானா, மீனாக்ஷ்ஷி, லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆஸ்பத்திரி ஒழுங்கை,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்