மரண அறிவித்தல்
திரு ராஜன் குணசிங்கம் (ஓய்வுபெற்ற அதிகாரி- இலங்கைக் கல்வித் திணைக்களம், Radio Officer /RO)

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்றோவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜன் குணசிங்கம் அவர்கள் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொரன்றோவில் இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜன், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி(சரோ- ஓய்வு பெற்ற ஆசிரியை- சென்.அன்ரனீஸ் கொன்வென்ட் கொழும்பு, CIBC INTRIA- மிசிசாகா உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்(கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னை நாள் இயக்குனர், கனேடிய இலங்கைக் கணக்காளர் ஒன்றியத்தின் அங்கத்தவர்- SAAC) அவர்களின் பாசமிகு தந்தையாரும்,
குலசிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(ராணி- மிசிசாகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
சோதிராஜா, ராதா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
புஷ்பம்(இலங்கை), ரவிநேசன், பஞ்சலிங்கம், ஜெகதீஸ்வரி, Dr. பாலசந்திரன், வசந்தி(பிரித்தானியா), ஜெகதீஸ்வரன், மகேஸ்வரி(இலங்கை), சிவலிங்கம், மங்களேஸ்வரி(மங்களா), ஸ்ரீநிவாசன், தவனேஸ்வரி(தவனா- இலங்கை), காலஞ்சென்ற சுபாஸ்காந்தன், சாவித்திரிதேவி(தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா, ஜெய்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சரோஜினிதேவி(சரோ- மனைவி), பிரகாஷ்(மகன்), குலசிங்கம்(சகோதரர்), ராணி(சகோதரி)