மரண அறிவித்தல்

திரு.வேலுப்பிள்ளை கனகராஜா (ஓய்வு நிலை வடக்கு கிழக்கு உதவிப்பதிவாளர் நாயகம்)

தோற்றம்: 01.10.1941   -   மறைவு: 27.09.2015

மரண அறிவித்தல்

திரு.வேலுப்பிள்ளை கனகராஜா (ஓய்வு நிலை வடக்கு கிழக்கு உதவிப்பதிவாளர் நாயகம்)

மண்ணில்-01.10.1941   விண்ணில்-27.09.2015

யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகவும் செங்கலடி, மட்டக்களப்பு, பூம்புகாரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு .வேலுப்பிள்ளை கனகராஜா (ஓய்வு நிலை வடக்கு கிழக்கு உதவிப்பதிவாளர் நாயகம்) அவர்கள் 27.09.2015 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இராமுப்பிள்ளை இராசம்மா தம்பதியினரின் மருமகனும் பராசக்தியின் அன்புக்கணவரும், நிரஞ்ஜனி, நிரஞ்ஜன், சுதர்சினி, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெகதீஸ்வரன், விஜயராகவன், வளர்மதி, சிறிசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்ஷயா, அரங்கன்,விக்னா, அருணோதன்,சோபிறா ஆகியோரின் பாட்டனாரும், கமலவேணி, காலஞ்சென்ற விவேகானந்தராசா, செல்வராசா , காலஞ்சென்ற விஜயரெட்ணம், காலஞ்சென்ற அன்னசோதி,யோகம்மா,மங்கையற்கரசி, நாகலட்சுமி, கேதீஸ்வரராஜா, புவணேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.09.2015 இன்று செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பி.ப 3.30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-குடும்பத்தினர்

இல-513/49, திருமலை வீதி, மட்டக்களப்பு

தொடர்பு-0652224493

 

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
திகதி : 29.09.2015 இன்று செவ்வாய்க்கிழமை
இடம் : அன்னாரின் இல்லத்தில் (இல-513/49, திருமலை வீதி, மட்டக்களப்பு)
தகனம்
திகதி : 29.09.2015 இன்று செவ்வாய்க்கிழமை பி.ப3.30
இடம் : கள்ளியங்காடு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 065 222 4493