1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜரட்ணம் பிரேமச்சந்திரன் (பிரேம் அல்லது சேகர்)
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜரட்ணம் பிறேமச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தலைவன் ஆண்டவனின்
செல்லக் குழந்தையாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது
நீ இல்லை என்று நாம் எண்ணவில்லை
உன் பொய்யுடல் தான் எம்மிடம் இல்லை
உடம்பு என்பது உண்மையில் என்ன
வெறும் காற்று அடைத்த பைதான் என்பது…
நீ என்னை விட்டுச் சென்றபோது உணர்தேன்னய்யா
எங்கே அப்பா அந்த உயிர் உயிர் என்று
நான் எழுப்பிய ஒலியுடன் நீ சென்றாய்
“உன்னை விட்டு நான் செல்ல மாட்டேன் என்
உடம்புதான் அழியும் நான் உன்னுடன் தான் இருப்பேன்”
என்ற நீங்கள் உரைத்த வார்த்தை தான் என்னையும்
உன் செல்வங்களையும் வாழ வைக்கிறது அப்பா!
கௌரித்தாயின் செல்ல மகனாய் என்றும் நீ இருக்க வேண்டுமென்று
என்றும் பிரதித்துக்கொண்டேயிருக்கும்
உன் பவா அம்மாவும்
உன் இரு கண்ணின் மணிகளான உன் இரு செல்வ மகள்கள்
உன் அம்மா, சகோதர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
தகவல்
சிவதர்ஷினி(மனைவி- தர்ஷினி அல்லது பவா), லக்க்ஷான(மகள்)

