மரண அறிவித்தல்
திருமதி அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் (சந்திரா)
திருமதி அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் (சந்திரா)
MA, M.phill, முன்னாள் கணித ஆசிரியை- வேலணை நடராசா வித்தியாலயம், சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம், திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரி, சண்முகநாதன் மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, முன்னாள் உப அதிபர்- முகத்துவாரம் இந்து கல்லூரி
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயராமசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷாந்தி, காலஞ்சென்ற ஜெயமோகன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா, கனகரத்தினம் மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, சகுந்தலாதேவி மற்றும் மகேந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இன்பகீதன், கவிதர்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், இரத்தினமலர், இராசமலர், தவமலர், மனோன்மணி, காலஞ்சென்ற சுகந்தி, ஜீவராணி, கோசலா, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவபாலன், தேவதாசன், தேவசீலன், தேவமலர் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
வர்ஷி, அக்சயன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.