மரண அறிவித்தல்
திருமதி.ரஞ்சிதம் குட்டித்தம்பி (ஓய்வு பெற்ற பிரதி கல்விபணிப்பாளர்)
ஓய்வு பெற்ற பிரதி கல்விபணிப்பாளரும் (கல்வி அபிவிருத்தி வடமராட்சி கல்வி வலயம்) உருப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபருமான திருமதி.ரஞ்சிதம் குட்டித்தம்பி 31.5.2015 அன்று காலமானார்.
அன்னார் இளைப்பாறிய அதிபர் திரு.ம.குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், திரு. திருமதி அ.டே போல் சந்தனவடிவு அவர்களின் அன்பு மகளும், திரு திருமதி மயிலன் சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும் YMCA ஊழியரான திரு அன்பழகன் அவர்களின் அன்புச் சகோதரியும், சிவகாந்தி, யோகராசா, தேவராசா, இராசரத்தினம் திருமதி.செ.இராசம்மா, நாகம்மா ரஞ்சி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 50 கீரிப்பல்லை வீதி கரணவாய் கிழக்கு கரவெட்டியிலுள்ள அன்னாரதது இல்லத்தில் 01.06.2015 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்று மதியம் 12 மணியளவில் வதிரி ஆலங்கட்டை மயானத்தில் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
தகவல்
குடும்பத்தினர்

