மரண அறிவித்தல்

திரு அம்பலவானன் ஸ்ரீகரன்

தோற்றம்: 19 JUL 1949   -   மறைவு: 16 MAY 2020
ஆயுர்வேத வைத்தியர் சுதுமலை வைத்தியம், முன்னாள் விவசாய ஆசிரியர் மானிப்பாய் இந்துக்கல்லூரி

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவானன் ஸ்ரீகரன் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவானன்(ஆயுர்வேத வைத்தியர்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மேகலா(கனடா), வாசுகி(கனடா), சுபாஷினி(சுதுமலை), சுகந்தினி(சுதுமலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான இராசாத்தி, சண்முகநாதன், கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார்(கனடா), பாலஷாந்தன்(கனடா), அருள்வேல்(சுதுமலை), மதிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனோகரன், புஷ்பராணி, கருணாகரன், ஜெயகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனுஷன், விஷாதன், ஹரிஷன், மாதினி, அஜய், விஜய், அஷ்வின், ஷாயினி, ஆதினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : +94761879228