மரண அறிவித்தல்

Lion விநாசித்தம்பி கந்தையா விஜயரத்தினம் (ஓய்வு பெற்ற விலைமதிப்பீட்டாளர் , சமாதான நீதிவான் )

  -   மறைவு: 07.09.2017

பிரதானவீதி, சித்தன்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி கந்தையா விஜயரத்தினம் (07.09.2017) வியாழக்கிழமை இறைபதம் எய்திவிட்டார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான  கந்தையா – இராஜேஸ்வரி  தம்பதியரின்  மகனும்  காலஞ்சென்றவர்களான  சிவப்பிரகாசம் – பங்கயவல்லி தம்பதியரின் அன்பு  மருமகனும்  கமலாதேவியின் அன்பு கணவரும் திவாகரன்(U.K ),  கணேஷ்கரன் (U.K ) ,சசிகரன் (U.K ),  ரஜிக்கா,  கார்த்திகா (இயன் மருத்துவர், யாழ்.போதனா வைத்தியசாலை) ஆகியோரின்  அன்பு  தந்தையும் திவ்யா (U.K ),  ஜமுனா (U.K ),  லலிதா (சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் ), சரத்தர்மரட்ணம்  (கண்ணன்), லோகநாதன் (கணக்காளர்,பிரதேச செயலகம் சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இரத்தினேஸ்வரி (சித்தன்கேணி ), ஞானேஸ்வரி (U.K ), ஜெகதீஸ்வரி  (U.K ),  தாயானந்தேஸ்வரி (U.K ),  சிவபாதரட்ணம் (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை  (10.09.2017)  ஞாயிற்றுக்கிழமை  மு.ப 10.00  மணியளவில் அவரது  இல்லத்தில்  நடைபெற்று  பூதவுடல்  தகனக்கிரியைக்காக  வழுக்கையாறு  இந்து  மயானத்துக்கு  மு.ப.11  மணியளவில் எடுத்து செல்லப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

0212250495
தகவல்:வி.கமலாதேவி (மனைவி)

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
வி.விமலாதேவி (மனைவி)
தொலைபேசி : 0212250495