பிறந்தநாள் வாழ்த்து

ப.கார்த்தி

பிறந்து விட்டாய் இந்த

பூமியை புரிந்து கொள்ள 

பிறந்து விட்டாய் ….!!!

இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும்
அதிசய உலகம் ….!!!
விளங்கியும் விளங்காத
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் …
மயங்கி விடாதே ….
நொந்துபோய் வெந்து
வீழ்ந்து விடாதே ….!!!

தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய்
செய்ய வேண்டும் ….
உனக்காக எனக்காக
வாழவேண்டாம் ……..
நமக்காக வாழ கற்று கொள்….!!!

வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
அதற்காக கொண்டாட்டம்
தேவையில்லையே ….!!!

கடந்த
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் …!!!
இந்த
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார்
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு
இருக்கும் தீய குணத்தை
அழித்துவிடு ….!!!

பிறப்புகளில் உயர் பிறப்பு
மானிட பிறப்பு ….
இப்பிறப்பில் நீ எல்லாம்
பெறவும் ….
பெற்றவற்றை உலகிக்கு
பகிரவும் வாழ்த்துகிறேன்
மகிழ்கிறேன் உன் பிறந்த
தினத்தை நினைத்து …..!!!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன் ….!!!

வாழ்த்துவோர் – அண்ணன் ப.உதயராசா, ஜனகன், இளைஞர் கழகங்கள், குட்செட் றோட் நண்பர்கள்.

stars-3-background