சாவகச்சேரியில் உணவக வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதி முதலாம் கட்டைப் பகுதியில் உள்ள பொன்னா உணவக வளாகத்தில் இருந்து 13/07 புதன்கிழமை கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
உணவக காணி வளாகத்தில் காணப்பட்ட கறையான் புற்றினை வெட்டிய போதே குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.இது தொடர்பாக காணி உரிமையாளர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் கைக்குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை