மருத்துவமனையில் போதைப்பொருள் விற்பனை செய்த சுகாதார உதவியாளர் கைது
கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) 173 போதை மாத்திரைகளை வைத்தியசாலையில் வைத்து விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை பரகம்மன பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர் இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெற உள்ளார்.
அவரது மகன் சில காலமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுகாதார ஊழியர் இன்று 12ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், அவர் சீருடையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை