வறுமையின் கோரப்பிடி – பெற்ற பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தாய்..!

வலப்பனை, மத்துரட்ட காவல் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை காப்பாற்றிய அயலவர்கள், சம்பவம் தொடர்பில் இது தொடர்பில் அவசர காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

 

 

வறுமையின் கோரப்பிடி - பெற்ற பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தாய்..! | Mother Who Breastfed The Children Born Of Poverty

இச்சம்பவ இடத்திற்கு விரைந்த மத்துரட்ட காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயை கைதுசெய்துள்ளனர்.

தனது கணவர் தன்னையும், பிள்ளைகளையும் கவனிப்பதில்லை, உண்ணுவதற்கு உணவு பொருட்கள் பெற்று தருவதில்லை, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப உபகரணங்கள் பெற்று தருவதில்லை. இதனால், தொடர்ந்து பட்டினிச் சாவை எதிர்கொள்கிறோம்.

இதனாலேயே நஞ்சருந்தி உயிரை மாய்த்து கொள்ள முயன்றதாக தாய் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மத்துரட்ட காவல்துறையினர், தாய் மற்றும் பிள்ளைகளை வலப்பனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.