கனடா இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்குகிறது..
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், கனடா 3 மில்லியன் டொலர்களை (சுமார் 817 மில்லியன் ரூபா) வழங்குவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால உணவு உதவி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்கு ஆதரவாக, ஐ.நா மற்றும் ஐ.எஃப்.ஆர்.சி மூலம், அவர்களின் உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த பங்களிப்பு வழங்கப்படும். உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்தல் உட்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கும் கனடா தற்போது சர்வதேச உதவித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இலங்கையர்களுடனும் தொடர்ந்து நிற்பதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கையை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை