ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகஸ்தர் கைது!
யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும், ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். அரியாலை பகுதியில் வைத்து குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரிடமிருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை