ஐக்கிய மக்கள் சக்தியில் அரசியலை ஆரம்பித்த நடிகை தமிதா !
பிரபல நடிகை தமிதா அபேரத்ன தனது முதல் அரசியல் பயணத்தை பொலன்னறுவையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (22) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது வாழ்க்கையில் முதல் தடவையாக அரசியல் மேடையில் இணைந்ததாக தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த தமிதா அபேரத்ன,
“ராஜபக்சே திருடர்களை விரட்டப் போராடினோம். சொன்னதைச் செய்தோம். அன்று அனைவரும் எங்களுடன் இணைந்தனர். போராட்டத்தில் தலைவர்கள் இல்லை என்பது பொய். இந்தப் போராட்டம் நாட்டில் உள்ள அனைவரின் போராட்டம். அந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தலைவர்கள் என்றார்.












கருத்துக்களேதுமில்லை