சஜித்தின் சகோதரி துலாஞ்சலி அனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.


2017 ஆம் ஆண்டு ஜயக்கொடியுடன் இடம்பெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துலாஞ்சலி ஜயக்கொடியின் சட்டத்தரணி விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்தைக் கையாளும் நோக்கில், மேற்படி சம்பவம் தொடர்பில் சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறான கருத்துகளையும் பரப்பி வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், அவதூறான அறிக்கைகளுக்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க துலாஞ்சலி ஜெயக்கொடி உத்தேசித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.