எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல் !

தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர் G.L.பீரிஸ் உள்ளிட்ட சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(28) சபாநாயகரை சந்தித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.