திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டம் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும்(50) மாணவர்களுக்கு இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் திருமதி. சுஜந்தினி யுவராஜா அதிபர் தலைமையில்

இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் அதிகஸ்ர,தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்கு பாடசாலையின் ஆசிரியைகளான க. சிறிதரன், அ. அலெக்ஸ்சாண்டர், அ. ரவிகுமார் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என வருகை தந்திருந்தனர்.

இனைந்த கரங்கள் அமைப்பு கல்விற்க்கான சேவையினை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமானாலும் நுற்றிற்கு மேற்பட்ட பாடசாலையை கடந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி அவர்களின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ. கஜருபன் சி.காந்தன்,மா. ஜெயநாதன்,சிருஸ்காந் சதீஸ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு இரு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.