தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி: கூட்டமைப்பின் அறிக்கை

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜனாதிபதி செயலணி தொடர்பாக தமது நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான வடக்கு கிழக்கில் நடைபெற்றுவம் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான அந்த செயலணியில் 11 பேர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி செயலணியில், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை ஆணையாளர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கமாகும்.

இந்நிலையில், இந்த செயலணிக்கு தமிழ் தலைமைகள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.