நாட்டில் இன்று மட்டும் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று
UPDATE 02 நாட்டில் இன்று மட்டும் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2050 ஆக அதிகரித்துள்ளது.
UPDATE 01 நாட்டில் மேலும் நாட்டில் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,049 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றுமட்டும் மேலும் 37 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,748 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி தற்போது தொற்று உறுதியானவர்களில் மேலும் 290 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை 55 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை