மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்  ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும். கிளினிக் நோயாளர்கள் தபாலகங்களில் ஊடாக மருந்துகளை பெற்றுகொள்ளுமாறு  போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்தார்.
போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்று ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றும் 21 ஊழியர்களுக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் போது வைத்தியசாலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்படலாம்.
இதனை தவிர்ப்பதற்காகவும் நோயாளியில் இருந்து ஊழியர்களுக்கும். ஊழியர்களில் இருந்து நோயாளிகளுக்கும் தொற்று பரவலை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்தவகையில் ஊழியர்கள் தகுந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவைகளை ஆற்றிவருகின்றனர்.
அதேவேளை தொற்றா நோயான சக்கரைவியாதி, இதயநோய், சிறுநீரகநோய், புற்றுநோய், மற்றும் வயோதிபர்கள் போன்றோருக்கு இது  அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்துவதால் இவ்வாறனவர்கள் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவiதை தவிர்த்து கிராமசேவகர் ஊடாக தபால் மூலமாக மருந்துக்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான தொலைபேசி எண்களான 065 3133330, 065 3133331 என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கிளினிக்குரிய மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் வைத்தியசாiiலைக்கு அவசியம் ஏற்படும் போது நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு தங்களுக்கு அருகாமையிலுள்ள வைத்திசாலைக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேவேளை நோயாளர்களை பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா.;
இருந்தபோதும் தற்போது உள்ள நிலமை காரணமாக நோயாளர்களை பார்வையிடும் நேரத்தை குறைத்து 15 நிமிடம் வரை
மாத்திரமே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருந்தும் நோயாளிக்கோ,பொதுமக்களுகோ தேவையான அவசியமான தேவைகளை நாங்கள் வழங்கிவருகின்றோம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பேணி வைத்தியசாலைக்கு ஓத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.