பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி:பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிசார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் ஒட்டிசுட்டான் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற ஒட்டிசுட்டான் பொலிசாரால் வாக்கு மூலம் பெறப்பட்டது.
வாக்கு மூலத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஒட்டுசுட்டான் பகுதியில் பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.