தலைவர் றிசாட் பதியுதீன் எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர்-நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்
எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட் வீதிகளையும் கொங்கிறீட் வீதிகளையும் பெற்றுக்கொண்டு கொந்துராத்து காரர்களாகவும் தரகர்களாகவும் மாறியுள்ளனர்..எமது தலைவர் றிசாட் பதியுதீன் அப்படிப்பட்டவர் அல்லர்.எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை நிறைவடைந்த பின்னர் இரவு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
இந்த நாட்டில் தற்போது பேசுபொருளாக இருக்கின்ற விடயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனின் கைதாகும்.இவ்விடயத்தில் பல்வேறு விடயங்களை உற்றுநோக்க வேண்டியுள்ளது.குறிப்பாக அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.இந்த நாட்டில் பல காலமாக அமைச்சராக இருந்து மக்களுக்கு பணியாற்றிய ஒருவர்.தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் குற்றவாளி என்ற தீர்ப்பை சட்டம் வழங்கப்படாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் இவருடைய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனத்தில் அதற்குரிய பொருட்களை குண்டுதாரிகள் கொள்வனவு செய்தார்கள் என்ற அடிப்படையில் அந்த நேரம் அமைச்சராக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட் வீதிகளையும் கொங்கிறீட் வீதிகளையும் பெற்றுக்கொண்டு கொந்துராத்து காரர்களாகவும் தரகர்களாகவும் மாறியுள்ளனர்.இவர்கள் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு மக்களிடம் அரசினை சார்ந்து போவதனால் தான் எமது மக்களின் உரிமை பெற்று தர கூடியதாக இருக்கும் என் கூறியவரகள்.ஆனால் தற்போது நடந்தது என்ன அழிவுகள் தான் மிஞ்சி இருக்கின்றது.
இச்செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை அணிந்து சமூகமளித்திருந்ததுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை