இதுவரையில் 1834528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!

இலங்கையில் இதுவரையில் 1834528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் 925 242 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 3 50 163 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 846 583 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதே போல 62703 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டுக்குத் தேவையான மேலும் 3400000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.