வவுனியாவில் கோர விபத்து!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (08.07.2021) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் மஸ்கெலியா பகுதியை சேர்ந்த பிரவீன் வயது 21 என்ற இளைஞனே மரணமடைந்துள்ளார்
விபத்து தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









கருத்துக்களேதுமில்லை