கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 வேகமாகப் பரவுகிறது!

தற்போது கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 பரவலானது வேகமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு ஒட்சிசன், அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும் விகிதம் என்பன அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக கொவிட் -19 தடுப்பூசியைப் பெற வேண்டும். ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் அதிக சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும், எனவே, அவர்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என குடும்ப நல பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.